உடலில் ஊசியை வைத்து அனுப்பும் மருத்துவர்கள்..! பதறும் நோயாளிகள்..!     - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை என்பவர் கடந்த 22 ஆம் தேதி காய்ச்சலின் காரணமாக வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

தம்பிதுரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு இருப்பதை உறுதி செய்த பின், அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் தம்பிதுரைக்கு ஊசி போட்டிருக்கிறார்.

அப்போது, அவர் போட்ட ஊசி உடைந்து தம்பிதுரையின் உடலில் சிக்கிருக்கிறது. இதன் காரணமாக தம்பிதுரைக்குப் பயங்கர வலி ஏற்பட்டதால், ஊசி ஏதேனும் ஆகி விட்டதா என்று மருத்துவர்களிடம் கேட்டார்.

அதற்கு மருத்துவர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து, வலியால் துடித்த தம்பிதுரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்திருக்கிறார்.

அதில், அவருக்குப் போடப்பட்ட ஊசி 9 மில்லிமீட்டர் அளவிற்கு அவரின் உடலின் எலும்புப்பகுதியில் சிக்கியுள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த தம்பி துறை இது குறித்து மீண்டும் அந்த மருத்துவமனையிடம் அவர் கேட்ட போது அவர்கள் சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது, அவர் உடைந்து உடலில் சிக்கியுள்ள ஊசியை வெளியே எடுக்கக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே, நாகை மாவட்டம் சீர்காழியில் வசித்து வரும் பார்வதி என்னும் பெண், காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குப் போட்ட ஊசி இதே போன்று அவர் உடலில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

injection inside man body in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->