கோவிலுக்கு முன்பு இறைச்சியை வைத்து சென்ற நபர்.. கோவையில் பரபரப்பு..!!
infront of temple unknown person through meat police investigation
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வைசியால் வீதியில் வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் பழக்கடைகள் மற்றும் நகை பட்டறைகள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எந்த நேரத்திலும் இருந்து கொண்டே இருக்கும் சூழலில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் ராகவேந்திரா சுவாமிகள் வாயில் பகுதியில் பேபி (வயது 65) என்ற பெண்மணி பூ விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
இந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமி, கோவிலின் வெளிப்புற கதவிற்கு அருகில் பிளாஸ்டிக் பையை வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கிருஷ்ணசாமி கோவில் வாயிலிலும் மற்றொரு பிளாஸ்டிக் பையை வைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் பையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பேபி பிளாஸ்டிக் பையில் என்ன இருக்கிறது என்று சென்று பார்க்கையில், அதில் இறைச்சி இருந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்த நிலையில், இறைச்சியை வைத்த ஆசாமி சம்பவ இடத்தில் இருந்து முன்னதாகவே தப்பி சென்றுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த இந்து அமைப்புகள் சம்பவ இடத்தில் திரண்டதால் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியின் அடிப்படையில், ஹரி (வயது 48) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
infront of temple unknown person through meat police investigation