3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் செம்ம மழை... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Indian Meteorological Center Announce Tamilnadu District Rain 15 April 2021 Evening 4 PM
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்.
கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தற்போது இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், " திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், தருமபுரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Indian Meteorological Center Announce Tamilnadu District Rain 15 April 2021 Evening 4 PM