திருவண்ணாமலை இராணுவ ஆட்கள் சேர்ப்பு முகாம்.!
Indian Army Tiruvannamalai Interview Announcement
திருவண்ணாமலையில் இராணுவ ஆட்கள் சேர்ப்பு முகாம் தொடர்பான தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கடலூர், வேலூர், திருப்பத்தூர் உட்பட 12 மாவட்டத்தினர் பங்கேற்கலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஜனவரி மாதம் 25 ஆம் தேதிக்கு பிறகு இணையதளம் மூலமாக தங்களின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இராணுவ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள 044 2567 4924 மற்றும் 044 2567 4925 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian Army Tiruvannamalai Interview Announcement