ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு.!
Increase in water level in Okanagan Falls Denial of permission to tourists
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Increase in water level in Okanagan Falls Denial of permission to tourists