விருதுநகர் பட்டாசு ஆலையில் அதிகாலையிலேயே பயங்கரம்.! பரிதாபமாக பலியான உயிர்கள்.!!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தொழிலானது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. உலகளவில் சிவகாசி பட்டாசுக்கென்று தனி மதிப்புகளும் உள்ளது. 

அவ்வாறு பட்டாசு தயாரிக்கப்படும் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்., அதிகளவில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து நேர்ந்து., தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.

விருதுநகரை அடுத்துள்ள சாத்தூர் துலுக்கன்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையநாத் செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல பணிகள் துவங்கப்பட்ட நிலையில்., பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில்., திடீரென பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு., வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதற துவங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறிய நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கும்., தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த துயர சம்பவத்தில் சுமார் 2 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in viruthunagar firework factory exposed two peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->