தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்., ஆடிய கபட நாடகம்.! துடிதுடித்த பெண்ணின் வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே அளிக்கப்படும் செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அருகேயுள்ள பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில்., நேற்று அந்த பெண் பணியை முடித்துக்கொண்டு இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த சமயத்தில்., நள்ளிரவு நேரம் என்பதால் பெண்ணுடன் பணியாற்றும் நண்பரான அருள்ஜோதி என்பவன் அவரை அழைத்து செல்வதாக கூறியுள்ளான்.

இதனை கேட்ட அவர் காம கொடூரனின் எண்ணத்தை அறியாமல் உடன் சென்ற நிலையில்., அங்குள்ள விநாயகபுரம் ரயில்வே கேட் பகுதியில் வைத்து அவனது நண்பர்களுக்கு தோழியை விருந்தாக்கி., கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளான். 

தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன் ரயில்வே தண்டவாளத்தில் அடித்து துன்புறுத்தி., பெண்ணை அங்கயே விட்டுவிட்டு சாலையில் இவனுக்கு அடிபட்டார் போல நாடகமாடி நடந்து வந்துள்ளான். 

இந்த நிலையில்., இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு தனது மகள் வரவில்லை என்று பயந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வரவே., சாலையில் அருள்ஜோதி இரத்த காயத்துடன் நின்று கொண்டு., நாங்கள் இருவரும் பணியை முடித்துவிட்டு வரும் போது எங்களை நால்வர் கும்பல் தாக்கி., அந்த பெண்ணை கற்பழித்ததாக கபட நாடகம் ஆடியுள்ளான். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு புதுச்சேரி மருத்துவனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய தகவலானது வெளிவந்துள்ளது. 

இது குறித்து வழக்குதிபதிவு செய்த காவல் துறையினர்., இந்த கொடூரத்தில் ஈடுபட்ட அருள்ஜோதி மற்றும் அவனது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram girl rapped by gang when miss used her friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->