திருமணமான 21 நாளில் கணவனை கொலை செய்த 19 வயது பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்..!!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகேயுள்ள டி.வி.நகர் பகுதியை சார்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுச்சேரியில் இருக்கும் பஞ்சர் கடையில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தங்களின் காதலை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில்., கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக இரண்டுபேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்விற்கு பின்னர் இருவரும் அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சேதுபதிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்., நேற்று மாலை நேரத்தில் சேதுபதி வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

வீட்டின் காதவானது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில்., வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டினுள் உறங்கிக்கொண்டு இருந்த சேதுபதி அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த சமயத்தில்., காற்றும் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து வீட்டினுள் சென்று பார்த்த சமயத்தில்., சேதுபதி உடல் கருகிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

Tamil online news Today News in Tamil

வீடானது தீப்பற்றி எறிந்த சமயத்தில் சேதுபதியின் மனைவி வீட்டில் இல்லை என்பதை அறிந்த காவல் துறையினர் முருகவேணியை சந்தேகித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., இருவருக்கும் இடையே திருமணம் முடிந்த நாட்கள் முதல் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த தகராறு தினமும் தொடர்ந்து வந்த நிலையில்., ஆத்திரமடைந்து கணவரை கொலை செய்ய முருகவேணி திட்டமிட்டுள்ளார். 

அவரின் திட்டப்படி சேதுபதி மது அருந்தி விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டு இருந்த சமயத்தில்., கணவரின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயை வைத்து விட்டு., கதவையும் வெளியே பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். தீப்பற்றி எரிந்ததால் சேதுபதியும் உடல் கருகி பலியாகி., வீடும் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த தகவலானாது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்தது. 

தற்போது வெளிவந்துள்ள தகவலானது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. அந்த விசாரணையில்., சேதுபதிக்கும் - எனக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. சேதுபதி தினமும் மது அருந்திவிட்டு வந்து., எனக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகளை வழங்கி வந்தான். இதுமட்டுமல்லாது எனது நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து துன்புறுத்தினான். இந்நிலையில்., சம்பவத்ததன்று மது போதையில் வந்த சேதுபதிக்கும் - எனக்கும் தகராறு நடந்த போது என்னை தீ வைத்து கொளுத்தி விடுவாயா? என்று கேட்டான். பின்னர் போதையில் படுத்துவிட்டான். 

இதற்கடுத்து ஆத்திரமடைந்த நான் அவனால் தினமும் சித்திரவதையை அனுபவிப்பதற்கு ஒரேநாளில் அனைத்தையும் தீர்த்துவிடலாம் என்று எண்ணி., அவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து., வீட்டின் கதவை பூட்டிவிட்டு வந்து., வீடு தீப்பற்றி எரிந்தத்தால் சேதுபதி உயிரிழந்தான் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தேன். காவல் துறையினர் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து., சிறையில் அடைத்தனர். நாடக காதலை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கவும் இதுதான் காரணம்... இருவேறு சமுதாயத்தை சார்ந்த நபர்கள் காதலித்து திருமணம் செய்தல் மட்டும் நாடக காதல் அல்ல... அறியாத வயதில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து அவளது வாழ்நாள் முழுவதும் இது போன்ற சோகத்தை நிகழ்த்துவதாலேயே நாடக காதலை எதிர்க்கின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram girl killed husband due to sexual torture police investigation shocking report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->