தாயின் கள்ளகாதலால் சீரழிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள்.! காம கொடூரத்தை அரங்கேற்றிய 10 உறவினர்கள்...!! வெளியான சோக துயரம்...!!
in vilupuram child girl rapped by her relation police investigation going on
நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக இருப்பது., பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் துயரங்கள் ஆகும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக பெண்கள் பாதுகாப்பிற்க்கான சட்டதிட்டங்கள் கடுமையாக மாறினால் மட்டுமே இது போன்ற குற்றங்களை குறைக்க இயலும்.
இது மட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே பாலியல் தொல்லைகள் வழங்கப்படும் செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த பெண்ணிற்க்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு ஒன்பது வயதாகும் நிலையில்., இரண்டாவது குழந்தைக்கு ஏழு வயதாகிறது. இந்த சமயத்தில்., கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பெண் கணவனை பிரிந்து இருந்துள்ளார்.
பணிக்காக அவ்வப்போது புதுச்சேரிக்கு சென்ற நிலையில்., புதுச்சேரியை சார்ந்த தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., தனது குழந்தைகளை தனது தாயாருடன் விட்டுவிட்டு., தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்., பல மாதங்கள் இருவரும் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்த சமயத்தில்., குழந்தைகளை காணுவதற்கு தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் தாயாரை கண்ட குழந்தைகள்., தாயாரை கட்டியணைத்து கதறியழுத்துள்ளனர்.
கதறியழுத குழந்தைகள் தாயாரிடம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்முறையை கூறவே., செய்வதறியாது திகைத்த பெண்மணி குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் பயில வைத்துள்ளார். இந்த சமயத்தில்., ஒன்பது வயதாகும் சிறுமி திடீரென மயங்கி விழவே., தங்கையும் சோர்வாக இருந்துள்ளார். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்., இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்., இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., சிறுமி அவரின் பாட்டியின் இல்லத்தில் இருந்த சமயத்தில்., 10 ற்கும் மேற்பட்ட காம கொடூரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்த அதிகாரிகள்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
in vilupuram child girl rapped by her relation police investigation going on