பச்சிளம் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கம்பி நீட்டிய பெண்மணி.. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு.!!
in vilupuram bus stand baby mother escaped police investigation going on
தமிழகத்தின் விழுப்புரம் நகரில் உள்ள புதிய பேருந்து நிலையமானது எந்த நேரமும் ஆட்கள் பழக்கம் இருந்துகொண்டே இருக்கும் இடமாகும். இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள்., தென்மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் வந்து செல்லும்.
இதுமட்டுல்லாது தமிழகத்தின் பல இடங்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் உள்ள நிலையில்., எந்த நேரமும் ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பெண்ணொருவர் கை குழந்தையுடன் வந்துள்ளார்.
இவருடன் துணைக்கு ஆட்கள் வராத நிலையில்., கழிவறைக்கு அருகேயிருந்த பயணியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறும்., தான் கழிவறைக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட பயணி கைக்குழந்தையோடு பெண் உதவி கேட்டதால் குழந்தையை வாங்கி கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில்., கழிவறைக்கு சென்ற பெண் மீண்டும் வரவேயில்லை. சிறுது நேரம் பொறுத்து பார்த்த பயணிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து கழிவறைக்கு சென்று பார்க்கையில் அவர் தப்பி சென்றது தெரியவந்ததை அடுத்து., இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள், குழந்தையை மீட்டு சென்றனர். மேலும்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in vilupuram bus stand baby mother escaped police investigation going on