காதலிக்க ஒன்னு.. கல்யாணத்துக்கு ஒன்னு.. விழுப்புரத்தில் பகீர்.!!
in vilupuram boy arrest police due to love
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவனூர் அரிசி ஆலைத் தெரு பகுதியை சார்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 26). இவர் சென்னையில் உள்ள கொளத்தூர் அருகே தங்கியிருந்து., அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., கொளத்தூர் பகுதியை சார்ந்த சகுந்தலா (வயது 29) என்ற பெண்ணுடன் புண்ணியமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சகுந்தலா சென்னை திருமங்கலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே., இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த 2 ஆம் தேதியன்று புண்ணியமூர்த்தி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., புண்ணியமூர்த்தியின் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரியவருகிறது. இந்த செய்தியை அறிந்த சகுந்தலா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., இது குறித்து வில்லிவாக்கம் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில் சகுந்தலா ஏமாற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து., புண்ணியமூர்த்தியை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in vilupuram boy arrest police due to love