16 வயது சிறுமியை கத்தியால் குத்தி, மண்ணெண்ணனை ஊற்றி தீ வைத்து கொலை முயற்சி.. உயிருக்கு போராடும் சிறுமி.. விக்கிரவாண்டியில் பரபரப்பு.!!
in Villupuram vikravandi 16 year child murder attempt police investigate
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் பாரதி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று சிறுமி தனது இல்லத்தின் பின்புறத்தில் தனியாக அமர்ந்து படித்து கொண்டு இருந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் அங்கு வருகை தனது பாரதியை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் பாரதியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் வலிதாங்க இயலாத சிறுமி அலறித்துடிக்கவே, இவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பதறியபடி வந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் வருகையை கண்ட இரண்டு கொடூரன்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, பாரதியை மீட்டு அங்குள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து பாரதியிடம் வாக்குமூலம் பெற்று, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் யார்? எதற்காக கொலை செய்ய முயற்சித்தனர்? என்பது தொடர்பாகவும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Villupuram vikravandi 16 year child murder attempt police investigate