ஊஞ்சலில் உல்லாசம் அனுபவித்த திருடன்.! உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!! விழுப்புரத்தில் பகீர்.!!
in villupuram oonjal thief searching by police for investigation
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுதாகர் நகர் பகுதியை சார்ந்தவர் இளங்கோ. இவர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில்., காவல் துறையினரின் அறிவுறுத்தலின் படி., இவரது இல்லத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்தியுள்ளார்.
இந்த நிலையில்., இவர் தனது குடும்பத்தாருடன் நேற்றிரவு இல்லத்தில் இரவு நேரத்தில் உறங்கியுள்ளார். இந்த தருணத்தில்., நள்ளிரவு சமயத்தில் பகட்டான ஆடையை அணிந்த திருடன் ஒருவன்., வீட்டின் பின்வழியாக நுழைந்து இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளான்.
மாடிவழியாக சென்றால் வீட்டிற்குள் எளிதாக நுழைந்து விடலாம் என்று எண்ணிய திருடன்., மாடிக்கு சென்ற சமயத்தில்., வீட்டிற்குள் செல்ல இயலாமலும்., மாடியில் வேறு பொருட்களும் இல்லாததால் ஏமாற்றமடைந்து வெளியே வந்துள்ளான்.
இந்த சமயத்தில்., மாடியில் இருந்த ஊஞ்சலை கண்டு மன உற்சாகம் அடைந்த திருடன்., ஊஞ்சலை உற்று நோக்கி இருந்து கொண்டு., பின்னர் ஆசை அதிகமாகவே என்று எண்ணிய நிலையில்., காசா பணமா என்று கூறி ஊஞ்சலில் சிறிது நேரத்திற்கு ஆடி மகிழ்ந்துள்ளான்.
ஊஞ்சல் கொண்டாட்டத்தில் இருந்து மீண்டும்., வந்த வேலையை கவனிக்க துவங்குவோம் என்று கூறிய வீட்டின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகன்னத்தில் பெட்ரோலை திருடி சென்றுள்ளான்.
இந்த நிலையில்., ஆசிரியர் வழக்கம்போல தனது இல்லத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்து கொண்டு இருந்த சமயத்தில்., இவருக்கு இந்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in villupuram oonjal thief searching by police for investigation