ரஞ்சித்தால் நாசமான குடும்பம்.! நண்பன் என்றும் பாராமல் செய்த காரியம்.!
in Villupuram murder due to illegal affair
விழுப்புரம் அருகே இருக்கு இருக்கும் வி.அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகளாக விழுப்புரத்தில் தந்தை பெரியார் நகரில் ஒரு வாடகை வீட்டில் மனைவி லதா, மகள் சங்கவி ஆகியோர் உடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு ரஞ்சித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததால், ரஞ்சித் ராஜகுமாரனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்பொழுது ரஞ்சித்துக்கும், லதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது வீட்டின் உரிமையாளருக்கு தெரியவர அவர்களை வீட்டை விட்டு காலி செய்து அனுப்பி விட்டனர்.
பின்னர் தன்னுடைய சொந்த ஊரிலேயே மனைவி, மகளுடன் ராஜகுமாரன் குடியேறினார். இந்நிலையில், நேற்று காலை ராஜகுமாரன் தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக லதா அக்கம் பக்கத்தில் தெரிவிக்க சந்தேகமடைந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில், அவர் கழுத்துபகுதி இறுக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்டார் என்பது தெரியவர லதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த தானும், ரஞ்சித்தும் சேர்ந்து ராஜகுமாரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் பின்னர், அவருடைய கள்ளக்காதலனும் மடக்கி பிடித்து காவல்துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Villupuram murder due to illegal affair