காலையில் குழந்தைப்பேறு.. மாலையில் திருமணம்.. அதிர்ந்துபோன உறவினர்கள்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!!
in Villupuram love couple marraige after delivery a baby
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் கடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இவரின் பெயர் கோகிலா (வயது 20). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் வருடம் பயின்று வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த செங்கேணி என்பவரின் மகனான பரமசிவம் (வயது 25) என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கோகிலா கர்ப்பமாகியுள்ளார்.
இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என்பதால், இதுகுறித்து கூறாமல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கோகிலாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்கு பின்னர் மருத்துவர்கள் குழந்தையின் தந்தையின் பெயரை கேட்கவே, குடும்பத்தார்கள் அனைவரும் விழிபிதுங்கி நின்றனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்து தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காதலர் பரமசிவம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதன்பின்னர் பரமசிவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் மாலை மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Villupuram love couple marraige after delivery a baby