பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை..!! விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!!
in villupuram girl murder and sexual harassment police investigation going on
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் தெற்கு ரயில்வே குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், பல வீடுகள் பாழடைந்து காணப்படுவதால் பலரும் இங்கு உள்ள பகுதிகளில் தங்காமல், வெளியே அறை எடுத்து தங்கி வருகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டும் வசித்து வரும் நிலையில், இங்கு உள்ள பாழடைந்த கட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாழடைந்த கட்டிடத்தில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணின் உடல் அருகே செங்கல் ரத்தக்கறையுடன் இருந்துள்ளது.
இவரை மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்ய வேண்டி இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பெண்ணின் தலை மற்றும் முகமானது கொடூரமாக தாக்கி அடையாளம் தெரியாமல், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் இந்தப் பெண் யார்? இவர் எதற்காக இங்கு வந்து கொலை செய்யப்பட்டுள்ளார்? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாழடைந்த கட்டிடத்தில் கடந்த ஆறு மாத காலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதால், இங்கு பல வாலிபர்கள் கஞ்சா போதையில் தள்ளாடியபடியே விழுந்து கிடப்பதும் வழக்கம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்கள் இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in villupuram girl murder and sexual harassment police investigation going on