டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான 5 வயது குழந்தை.! கண்ணீர் விட்டு கதறியழுத பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகேயுள்ள செந்தூர் கிராமத்தை சார்ந்தவர் கன்னியப்பன் (வயது 33). இவர் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் இலக்கியா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., ஐந்து வயதுடைய சாக்தியா என்ற பெண் குழந்தை உள்ளார். 

இவர்கள் வசித்து வரும் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடின் காரணமாக., டிராக்டரில் வீடுகளுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கன்னியப்பன் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டிற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்கு., அதே பகுதியை சார்ந்த ஏகாம்பரம் தண்ணீர் டிராக்டரை இயங்கிக்கொண்டு வந்துள்ளார். 

வீட்டிற்கு அருகில் வந்த சமயத்தில் டிராக்டரை பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்த நேரத்தில்., அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சாகித்யாவின் மீது டிராக்டர் சக்கரங்கள் எதிர்பாராத விதமாக ஏறியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அலறவே., உடனடியாக சுதாரித்து டிராக்டரை முன்னோக்கி ஏகாம்பரம் இயக்கினார். 

இதனையடுத்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீது அங்குள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை கண்டு கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு., ஏகாம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram child died by tractor accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->