நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து.. மீட்புக்குழு விரைந்தும் அரங்கேறிய பெரும் சோகம்.!!
in villupuram bus accident people died 40 more injured
தமிழகத்தின் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி தனியார் பேருந்தானது நேற்று நள்ளிரவு நேரத்தில் புறப்பட்டுள்ளது. பேருந்தில் மொத்தமாக 40 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த பேருந்து இன்று அதிகாலை நேரத்தில் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள சேர்ந்தநாடு குறுக்கு சாலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த சமயத்தில்., சாலையை கடக்க முயற்சித்த நேரத்தில்., கோயம்புத்தூரில் இருந்து சென்னையை நோக்கிய மற்றொரு பேருந்து வந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த நேரத்தில் இரண்டு பேருந்துகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்திற்குள்ளானதை அடுத்து., இரண்டு பேருந்துகளின் முன் பகுதியும் சேதம் அடைந்துள்ளது. மேலும்., பேருந்தில் பயணம் செய்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்., சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in villupuram bus accident people died 40 more injured