சாலையோரம் நின்ற வாகனம்.. அதிவேகத்தில் வந்த கே.பி.என் ட்ராவல்ஸ்.. அரங்கேறிய பெரும் விபத்து.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் தனது குடும்பத்தாருடன் தூத்துக்குடிக்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். இவர்களின் கார்  இறைஞ்சி கிராமம் அருகே வந்து கொண்டு இருந்துள்ளது. 

இந்த நேரத்தில், அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்து அரசு பேருந்து, காரின் பின்புறமாக எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காருக்கு சிறிய பாதிப்பு மட்டும் ஏற்பட்டு இருந்தது. 

இதனால் காரிலிருந்து இறங்கிய நபர் அரசு பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கி கே.பி.என் டிராவல்ஸ் சொகுசுப் பேருந்து அதே வேகத்தில் வந்து அரசு பேருந்தின் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உயிருக்கு போராடி துடித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in villupuram bus accident 4 peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->