வேலூர் கர்ப்பிணி பெண் தற்கொலை வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!
in vellore pregnant wife killed by husband police investigation going on
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 23). இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய பவித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.
கட்டிட தொழிலாளியாக செல்வம் பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு மது அருந்தும் பழக்கமானது இருந்து வந்துள்ளது. மேலும்., தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்., தனலட்சுமி மீண்டும் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்., கடந்த 18 ஆம் தேதி இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., தனது தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி., தனலட்சுமியின் சகோதரர் கண்ணன் அங்குள்ள இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுமட்டுமல்லாது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆவதால்., மாவட்ட உதவி ஆட்சியரும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த சமயத்தில்., செல்வத்தின் மீது காவல் துறையினருக்கு முதலில் இருந்தே சந்தேகம் இருந்து வந்த நிலையில்., இது தொடர்பான விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும்., முதலில் மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் கொலை செய்ததாக கூறிய நிலையில்., தற்போது கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று., மது போதையின் உச்சக்கட்டத்தில் வந்த செல்வம்., வீட்டில் சேலை விலகிய நிலையில் தனலட்சுமி உறவுவதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் தனலட்சுமியை கடுமையாக தாக்கியதை அடுத்து., அவர் பரிதாபமாக துடித்து உயிரிழந்துள்ளார். இதனால் பதறிப்போன நான் அவரின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி நம்பவைத்தேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore pregnant wife killed by husband police investigation going on