ஊதாரி கணவனின் அநியாய தொல்லை.. கள்ளக்காதலனை வைத்து போட்டுத்தள்ளிய மனைவி..!! திருப்பத்தூரில் பகீர்.!!
in vellore murder due to illegal affair police arrest culprits
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன மூக்கனூர் பகுதியை சார்ந்தவர் முனுசாமி. இவரது மகனின் பெயர் ரமேஷ் (வயது 43). இவர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் நதியா (வயது 27). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த நான்காம் தேதி ரமேஷ் அங்குள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ரமேஷின் மனைவி நதியா மற்றும் அவரது தம்பி அரவிந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக இருந்த கணபதியை ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் கணபதி தெரிவித்த வாக்குமூலத்தில், ரமேஷின் மனைவியான நதியா என்னிடம் சித்தாளாக பணியாற்றி வந்தார். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியது.
ரமேஷும் குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றிவந்த நிலையில், ரமேஷிற்கும் - நதியாவிற்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நதியாவின் சகோதரர் அரவிந்தனின் மனைவியிடம், ரமேஷ் பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளார்.
இதனால் ரமேஷிற்கும் - அரவிந்தனிற்கும் விரோதம் ஏற்பட்ட நிலையில், ரமேஷின் நடவடிக்கை மோசமடைந்து சென்றதால் பொறுமையை இழந்துள்ளனர். இதனால் அரவிந்தன் - நதியா திட்டமிட்டு ரமேஷை கொலை செய்ய முடிவெடுத்தனர்.. பின்னர் இது தொடர்பாக என்னிடம் தெரிவித்தனர்.
நதியாவின் ஆசைக்கிணங்க கொலைக்கு சம்மதம் தெரிவித்து, ரமேஷை சம்பவத்தன்று மது அருந்த அழைப்பு விடுத்தேன். நாங்கள் இருவரும் மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு, ரமேஷிற்கு போதை ஏறியதும் கத்தியால் வெட்டி கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார். ரமேஷின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore murder due to illegal affair police arrest culprits