காதலி குடும்பத்தாரின் வெட்டி பேச்சால் மகனால் கொலை செய்யப்பட்ட தாய்.. வேலூரில் பேரதிர்ச்சி சோகம்.!
in Vellore mother killed by son due to love fight
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ஆர்.எஸ்.புரம் பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவியின் பெயர் கலைவாணி (வயது 42), இவர்கள் இருவருக்கும் விக்ரம் என்ற மகனும், நர்மதா என்ற மகளும் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக ஜெயக்குமார் இறந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாக கலைவாணி விக்ரமுடன் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள ஒக்கனாபுரம் கிராமத்தில் வாடகை இல்லத்தில் வசித்து வந்துள்ளார். கலைவாணி தனியார் பள்ளியில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விக்ரம், அவ்வப்போது தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், விக்ரம் பெண்ணொருவரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இவர்களின் காதலுக்கு கலைவாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில்,கலைவாணி மற்றும் விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்படவே, இந்த விஷயத்தை அறிந்த விக்ரம் தனது தாயை அடித்து உதைத்துள்ளார். இதனால் வலி தாங்க இயலாத தாய், வீட்டை விட்டு வெளியேறி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார்.
தாய்க்கு பின்னதாகவே துரத்தி சென்ற மகன், வேலூரில் இருந்து ஆம்பூர் சென்ற லாரி வருவதை கண்டு தாயை லாரியில் தள்ளி விட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய தாயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விக்ரமை செய்ததில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Vellore mother killed by son due to love fight