கள்ளகாதலுக்காக குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர தாய்..! தீவிர சிகிச்சையில் போராடும் குழந்தை.. வேலூரில் கொடூரம்..!!
in vellore mother illegal affair baby torched by mother
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூரை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் அருண். இவர் எலக்டீரிசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் விசித்திரா. இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய குழந்தை உள்ள நிலையில்., இவரின் குழந்தை கடந்த 26 ஆம் தேதியன்று உடல் முழுவதும் கொப்புளங்கள் உள்ள நிலையில்., வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் உடலில் கொப்புளங்கள் அதிகளவு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்., குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது குழந்தையின் பிறப்புறுப்பு பகுதிகளிலும் சூடு போட்டதற்கான காயங்கள் இருந்ததன் காரணமாக., குழந்தைக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் நடைபெற்றதா? என்ற சந்தேகமும் அதிகளவில் எழுந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள்., குழந்தைகளை பார்வையிட்டு., இது குறித்து வேலூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., குழந்தையின் தாயாரான விசித்திராவிற்கு., அதே பகுதியை சார்ந்த நபருடன் பழக்கம் ஏற்படவே., இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததை அடுத்து., குழந்தையை துன்புறுத்தியுள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in vellore mother illegal affair baby torched by mother