மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கடத்தி கற்பழிக்க முயன்ற கேடுகெட்ட தந்தை மற்றும் மகன்.! பதறிப்போன தோழி செய்த சிறப்பான சம்பவம்.!!
in vellore mentally affected girl try to rap by father and son police investigation going on
இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வரும் சமயத்திலும் ஏற்படும் பலவிதமான பிரச்சனைக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்., பெண்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் அவர்களுக்கே தெரியாமல் சில நயவஞ்சகனால் பல அநீதிகள் இழைக்கப்பட்டு பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டு., தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியே சொல்ல இயலாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கொடூர எண்ணத்தை கொண்ட காமக்கொடூரன்களால் சில நேரத்தில் வயதான பெண்களுக்கும்., 5 வயது பச்சிளம் குழந்தைகளுக்கும்., சிறுமிகளுக்கும் பல கொடூரங்கள் அரங்கேறியதும்., இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கொடூரத்தையும்., துயரத்தையும் நாம் அறிவோம்.
இந்த செயலில் சில நேரத்தில் .....குறியை அடக்க தெரியாத கொடூர எண்ணம் கொண்ட காம அரக்கனால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் நிகழ்வானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்துள்ள புலிக்குட்டை பகுதியை சார்ந்த காமக்கொடூரனின் பெயர் வெங்கடாசலம் (வயது 75)., அவனது கேடு கெட்ட மகனின் பெயர் கிருஷ்ணன் (வயது 45).
இவர்கள் இருவரும் அங்குள்ள பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வரும் நிலையில்., அதே பகுதியை சார்ந்த சுமார் 13 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கடைக்கு வந்துள்ளார்.
இந்த நேரத்தில் சிறுமியின் தோழி சிறிது இடைவெளியில் நடந்து வந்து கொண்டு இருக்கவே., சிறுமியை கவனித்த தந்தை மற்றும் மகன் இருவரும்., சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
தோழியை இருவரும் வீட்டிற்குள் அழைத்து சென்றதை பார்த்துக்கொண்ட சிறுமி உடனடியாக கதவை தட்டி அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். இவரின் கூச்சலை கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர்., உடனடியாக மளிகை கடைக்கு விரைந்து சிறுமியிடம் விஷயத்தை கேட்டறிந்தனர்.
இந்த தகவலை அறிந்த அவர்கள் ஆத்திரமடைந்து கதவை உடைக்க முயற்சித்தனர்., வசமாக மாட்டிக்கொண்ட பயத்தில் சிறுமியை விட்டுவிட்டு கதவை திறந்த இருவரையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
பின்னர் இந்த தகவலை சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்து அவர்கள் வந்ததும் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அங்குள்ள திருப்பத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in vellore mentally affected girl try to rap by father and son police investigation going on