குடும்ப பிரச்சனையை பேசி தீர்க்க வந்த மச்சானை, உறவினர்கள் மூலம் அடித்தே கொலை செய்த கொடூரம்.. வேலூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சேரி ரெங்கபுரம் பகுதியை சார்ந்தவர் செல்வகணேஷ் (வயது 48). இவர் ஆம்பூரில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் நிர்மலா (வயது 45). இவர்கள் இருவருக்கும் நிர்மலா மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், தம்பதிகளுக்குள் அவ்வப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் நேரத்தில், பெங்களூரில் பணியாற்றி வந்த நிர்மலாவுடைய அண்ணன் நந்தகோபாலன் (வயது 52) பேர் சமாதானம் செய்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில், தம்பதிகளுக்குள் நேற்று முன்தினம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நிர்மலா அலைபேசியின் மூலமாக சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பணியை முடித்துவிட்டு வேலூருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதன்படி இரவு சுமார் 11 மணியளவில் சமாதானம் செய்ய வேலூருக்கு வந்த நந்தகோபாலன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

இந்த தருனத்தில், செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் - நந்தகோபாலன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகணேசன் மற்றும் அவரது உறவினர்கள் நந்தகோபாலை சரமாரியாக தாக்கியதில், நிலைகுலைந்த நந்தகோபால் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். 

இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், இவரை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பான தகவல் சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் நந்தகோபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து சத்துவாச்சாரி பகுதியை சார்ந்த விக்னேஷ் (வயது 35), காகிதப்பட்டறை பகுதியை சார்ந்த மணிகண்டன் (வயது 29) மற்றும் சேண்பாக்கம் பகுதியை சார்ந்த கோடீஸ்வரன் (வயது 20) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், செல்வகணேஷ் மற்றும் அவரது அக்கா சாந்தி, அக்காவின் கணவர் ரவி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், உயிரிழந்த நந்தகோபாலனிற்கு சுதர்சினி என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore man murder due to family problem solve conversion fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->