தாயின் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மகன்..! குட்டையில் அரங்கேறிய விபரீதம்.. வெளியான பகீர் தகவல்.!!
In vellore man died in water police investigation going on
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை வடகரை பகுதியில் இருக்கும் பாலாற்றில் மணல்கொள்ளை நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
தொடர் மணல் கொள்ளையின் காரணமாக சுமார் 10 அடி அளவிலான பள்ளங்கள் மற்றும் 20 ஆடி அளவிலான பள்ளங்கள் ஆகியவை உள்ள நிலையில்., கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே அங்குள்ள பகுதிகளில் கனமழையானது பெய்து வந்தது.
இதனால் மணல்கொள்ளை நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் மழை நீர் நிரம்பியுள்ள நிலையில்., இதே பகுதியை சார்ந்த கலைவாணி என்பவர் அவரது மகன் மோகன்ராஜுடன் அவர்ளுக்கு சொந்தமான ஆடு மற்றும் மாடுகளை நீரில் குளிக்க வைத்து கொண்டு இருந்தனர்.
இந்த சமயத்தில்., நீருக்கடியில் இருந்த பள்ளத்தில் மோகன்ராஜ் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து கூச்சலிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார்., கதறி கூச்சலிட்டதை அடுத்து., இவரின் கூச்சல் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மோகன்ராஜை மீட்க முயற்சித்தனர்.
அக்கம் பக்கத்தினர் அனைவரும் அரைமணி நேரத்திற்கும் மேலாக போராடி மோகன்ராஜை மீட்ட நிலையில்., அங்கிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்ததை அடுத்து., உறவினர்கள் அனைவரும் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In vellore man died in water police investigation going on