மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை., நண்பனின் மனைவியை வைத்தே செருப்பால் அடிக்க வைத்த கணவர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கள்ளக்காதல் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. திருமணம் முடிக்கப்பட்ட நபர்களுக்கு துரோகம் இழைப்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த கள்ளக்காதல் விஷயத்தை பொறுத்த வரையில்., ஆண் - பெண் என இருபாலரும் அன்பிற்க்காகவும்., மோகத்திற்க்காகவும் ஏங்கிய நிலையில் கள்ளக்காதல் உறவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியை சார்ந்தவர் கபீர் அகமது மற்றும் இர்பான் அகமது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில்., கபீர் கத்தார் நாட்டில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். மேலும்., கபீரின் குடும்பமும் அவருடனே இருந்துள்ளது. 

illegal affair, couple enjoy, affair, husband wife enjoy, தாம்பத்தியம்,

இந்த சமயத்தில்., இர்பான் அகமது திருமணம் முடிந்த நிலையில் வேலையின்றி வாணியம்பாடியில் இருந்த நிலையில்., தனது நண்பரான கபீரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கபீரும் மூன்று மாத சுற்றுலா விசாவினை அனுப்பி வைத்து., இர்பானை காத்தருக்கு வேலை தேடி செல்ல வழிவகை செய்துள்ளார். 

இதனையடுத்து கத்தாருக்கு சென்ற இர்பான் - கபீரின் இல்லத்தில் தங்கியிருந்த சமயத்தில்., கபீரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இந்த தகாத உறவு கபீருக்கு தெரியவந்துள்ளது. 

வேலூரில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்,

இந்த தகவலை கேட்டு குபீரென பொங்கிய கபீர்., அதிர்ச்சியடைந்து நண்பனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அமைதிகாத்து இருந்துள்ளார். பின்னர் இர்பான் மற்றும் கபீர் அகமது தனது குடும்பத்தாருடன் இந்தியாவிற்கு திரும்பிய நிலையில்., கபீரின் நடவடிக்கையில் சந்தேகமுற்று இர்பான் மும்பையில் கபீரின் குடும்பத்தாரை பிரிந்து தலைமறைவாகியுள்ளார். 

மேலும்., வாணியம்பாடிக்கு வருகை தந்த கபீர் - இப்ரானின் இல்லத்திற்கு சென்று விஷயத்தை கூறி., இப்ரானை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்ற இப்ரானின் உறவினர்களும் இப்ரானை கண்டறிந்து ஒப்படைத்தனர். இதனையடுத்து., இருவரும் ஒருவரையொருவர் தாக்கிய நிலையில்., இப்ரானின் மனைவியை வைத்தே இப்ரானை செருப்பால் அடிக்க வைத்தனர். இந்த காட்சிகள் இணையத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore illegal affair man attack by her wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->