கணவன் இறந்த மறுநாளே மனைவி செய்த காரியம்.! பெற்றோருக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


காட்பாடியில் கல்புதூர் திருவேங்கட முதலியார் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா (வயது 25) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன பின்னும் குழந்தை இல்லை.

கடந்த வாரம் சீனிவாசன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துள்ளார். கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் திவ்யா மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த திவ்யா தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். 

இதன் காரணமாக துடிதுடித்த அவர் அந்த இடத்தியிலேயே இறந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் இவ்வாறு தற்கொலை செய்த கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore husband died similarly wife attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->