காதல் கணவன் மற்றும் ஒரு வயது குழந்தையை கொடூர கொலை செய்த மனைவி.! கள்ளக்காதல் மோகத்தால் அரங்கேறிய சோகம்?.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனையும்., அதனால் நடைபெற்ற பல கொலைகள் பற்றியும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னையின் அபிராமி என்று பல கொலைகள் கள்ளக்காதல் காரணமாக நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டை அடுத்துள்ள ராஜ்புரா மந்தைவெளி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி., இவரது மகனின் பெயர் ராஜா (வயது 25). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த தீபிகா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். 

இவர்கள் இருவருக்கும் ப்ரனீஷ் என்ற ஒரு வயதுடைய குழந்தை தற்போது உள்ளது. இந்த நிலையில்., கடந்த 13 ஆம் தேதியன்று தனது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த சமயத்தில் காவல் துறையினரின் திட்டப்படி ராஜாவின் அலைபேசி எண்ணை அறிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியலாம் என்று நினைத்து உள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் அவரது அலைபேசி எண்ணை கேட்டபோது., அவர் அலைபேசி வீட்டில் உள்ளதாகவும் அதனை கணவர் வீட்டில் வைத்து விட்டு பின்னர் சென்று விட்டார் என்றும் மனைவி தீபிகா கூறியுள்ளார். 

மேலும்., காவல்துறையினர் விசாரணையில் தீபிகா முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளார். இதன் காரணமாக அவரின் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரத்தில் கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில்., கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வீட்டின் அருகேயுள்ள நிலத்தில் புதைத்தாக தெரிவித்துள்ளார். 

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்று., அவரின் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்த பின்னர்., இரண்டு உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்ததால்., வேறு வழியின்றி அவரை கொலை செய்ததாகவும்., கணவரை கொலை செய்த ஆத்திரத்தில் குழந்தை என்றும் பாராமல் குழந்தையையும் கொலை செய்ததாக தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க இவர்களின் கொலைக்கான காரணம் தீபிகாவின் கள்ளக்காதல் என்ற தகவலும் வெளிவருகிறது. 

ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர்., இவர்களின் இல்லத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நிலையில்., தீபிகாவிற்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக வளர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும்., இதன் காரணமாக தீபிகாவின் கணவர் மற்றும் அவரது குழந்தையை கொலை செய்து இருக்கலாம் என்றும் அங்குள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore husband and chilld killed by her wife due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->