கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்த மனைவி வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! கள்ளக்காதல் மோகம் கண்மறைத்த சோகம்.!!
in vellore husband and baby killed by mother due to illegal affair
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டை அடுத்துள்ள ராஜ்புரா மந்தைவெளி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி., இவரது மகனின் பெயர் ராஜா (வயது 25). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த தீபிகா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் ப்ரனீஷ் என்ற ஒரு வயதுடைய குழந்தை தற்போது உள்ளது. இந்த நிலையில்., கடந்த 13 ஆம் தேதியன்று தனது கணவர் மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில் காவல் துறையினரின் திட்டப்படி ராஜாவின் அலைபேசி எண்ணை அறிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியலாம் என்று நினைத்து உள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் அவரது அலைபேசி எண்ணை கேட்டபோது., அவர் அலைபேசி வீட்டில் உள்ளதாகவும் அதனை கணவர் வீட்டில் வைத்து விட்டு பின்னர் சென்று விட்டார் என்றும் மனைவி தீபிகா கூறியுள்ளார்.
மேலும்., காவல்துறையினர் விசாரணையில் தீபிகா முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளார். இதன் காரணமாக அவரின் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரத்தில் கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில்., கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வீட்டின் அருகேயுள்ள நிலத்தில் புதைத்தாக தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்று., அவரின் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்த பின்னர்., இரண்டு உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்ததால்., வேறு வழியின்றி அவரை கொலை செய்ததாகவும்., கணவரை கொலை செய்த ஆத்திரத்தில் குழந்தை என்றும் பாராமல் குழந்தையையும் கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில்., இது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் கூறியதாவது.,
இது குறித்த விசாரணையை ராஜாவின் நண்பரான 27 வயதுடைய ஜெயராஜ் என்பவரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., சம்பவத்தன்று கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்த தீபிகா., கள்ளகாதலன் ஜெயராஜிற்கு தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறிய பின்னர்., வீட்டிற்கு சென்ற நேரத்தில் இருவரும் பிணமாக கிடந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களை குழி தோண்டி புதைத்தாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் அத்ரிவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in vellore husband and baby killed by mother due to illegal affair