இரயில்வே தண்டவாளத்தில் ஆடைகள் கலையப்பட்டு இருந்த பெண்ணின் உடல்.! வேலூரில் மீண்டும் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்துள்ள பச்சை குப்பம் இரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள பகுதியில் 25 வயதுடைய பெண்ணின் உடலானது சிதைந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே காவல் துறையினர் பெண்ணின் உடலை சோதனை செய்தனர். 

அந்த சோதனையில் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதையும்., பெண்ணின் உடல் முழுவதுமாக காயங்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும்., பெண்ணின் உடல் பெண் இறந்த பின்னர் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர். இதனையடுத்து ஆம்பூர் காவல் துறையினருக்கு., இரயில்வே காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். 

பாலியல் வன்கொடுமை, sexual harassment, rapped, gang rapped,

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் யாரின் கட்டுப்பாட்டிற்குள் இந்த கொலை தொடர்பான விசாரணை வருகிறது என்று பேசி முடித்து., சுமார் 10 மணிநேரம் கழித்த பின்னர் விசாரணை ஒரு வழியாக துவங்கப்பட்டது. இந்த சமயத்தில் பெண் அவர் அணிந்திருந்த புடவையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகித்து வருகின்றனர். 

இதற்குப்பின் வேலூரில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்., பெண்ணின் உடலில் காயங்கள்., கலைந்த நிலையில் ஆடைகள் இருந்ததால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl sexual harassment and rapped by gang police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->