சேர்ந்து வாழ்ந்தோம்.. 5 மாசம் னு சொல்றா.. எனக்கு ஒரு வயசு குழந்தை இருக்கு..! ஆம்பூர் பெண் கொலை வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆமூர் கொம்மேஸ்வரம் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி. இவரது மகளின் பெயர் சுமதி (வயது 30). இவர் ஆம்பூர் பகுதியில் செய்யப்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், நேற்று காலையில் அங்குள்ள விண்ணமங்கலம் பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், சுமதியின் அலைபேசியில் இருந்து இறுதியாக மின்னுர் காளிகாபுரம் பகுதியை சார்ந்த சீனு (வயது 30)என்பவரிடம் பேசி வந்தது தெரியவந்துள்ளது. சீனு ஆட்டு வியாபாரியாக இருந்து வருகிறார்.

இதனையடுத்து நேற்றிரவு மாமியாரின் இல்லத்தில் இருந்த சீனுவை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுமதியும் - நானும் கடந்த இரண்டு வருடமாக சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் வீடெடுத்து கணவன் - மனைவியாக வசித்து வந்தோம். எனக்கு, கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக மற்றொரு பெண்ணுடன் திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், சுமதியுடன் நான் நெருங்கி பழகி உறவாடி வந்த காரணத்தால், சுமதி கர்ப்பமாகியிருக்கிறார். சுமதி என்னிடம் நான் 5 மாத கர்ப்பமாக உள்ளேன் என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ளகூறியும் வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து, கடந்த 17 நாட்களுக்கு முன்பு சாமுண்டி அம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்று அழைத்து சென்று, பின்னர் கல்குவாரியில் வைத்து கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl murder man cheated and spoiled life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->