கள்ளக்காதல் மோகத்திற்காக நான்கு வயது குழந்தையை அண்டாவில் மூழ்ங்கடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூர தாய்.!!
in vellore girl killed her son due to illegal affair
வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சார்ந்தவர் இராமச்சந்திரன். இவரது மனைவியின் பெயர் காவியா. இராமச்சந்திரன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவர்கள் இவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய தருண் என்ற அழகிய குழந்தை இருக்கும் நிலையில்., குடும்பத்தகாரரின் காரணமாக காவியா தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனது தாயாரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில்., அங்குள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்ற காவியாவிற்கு., தியாகராஜன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரின் பழக்கமானது நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த நிலையில்., இவர்கள் இருவரும் காதலித்து சென்ற ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பின்னர் தியாகராஜன் மற்றும் காவியா குழந்தையுடன் வசித்து வந்த நிலையில்., இவர்களின் உல்லாச மோகத்திற்கு குழந்தை தடையாக இருப்பதாக கருதியுள்ளனர்.
இதனையடுத்து குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டு., வேறு ஒரு வீட்டிற்கு அவசர அவசரமாக குடியேறியுள்ளனர். இந்த நிலையில்., கடந்த 13 ஆம் தேதியன்று வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை அண்டாவில் மூழ்கடித்து குழந்தையை துடிதுடிக்க இருவரும் கொலை செய்துள்ளனர். குழந்தை இறந்தவுடன் குழந்தையை சாக்கு மூட்டையில் கட்டி அங்குள்ள பாலாறு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் எதையும் அறியாத காவியாவின் குடும்பத்தினர் மற்றும் இராமச்சந்திரனின் குடும்பத்தினர் குழந்தையுடன் இருவரும் நலமாக இருக்கின்றனர் என்று எண்ணி இருந்துள்ளனர். இந்த நிலையில்., காவியாவின் தாயார் வீட்டிற்கு வந்த சமயத்தில் குழந்தை எங்கே என்று கேட்கவே., துவக்கத்தில் மழுப்பிய காவியா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டர்.
இந்த நிகழ்விற்கு பின்னர் அங்குள்ள கிராம அலுவலரின் அலுவலகத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த தியாகராஜன் தலைமறைவாகவே., அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
in vellore girl killed her son due to illegal affair