5 திருமணம் செய்தும் அடங்காத கொட்டம்..! 5 வயது மகளை சீரழித்த காம கொடூரன்., இறுதியில் அரங்கேறிய சோகம்..!! வேலூரில் பரபரப்பு..!!
in vellore child sexual harassment by her father police investigation going on
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியை அடுத்துள்ள காயிதேமில்லத் நகர் பகுதியை சிறந்தவர் ஷான்பாஷா (வயது 50). இவர் நிரந்தர பணிகளுக்கு செல்லாமல்., கிடைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில்., காம கொடூர எண்ணத்தில் இருந்த பாஷா அவ்வப்போது பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஏமாற்றியும் வந்துள்ளான்.
மேலும்., பெண்களிடம் அன்பாக பேசி., அவர்களை ஏமாற்றி சீரழித்தும் வந்துள்ளான். இதுவரை சுமார் 5 பெண்களை காம கொடூரன் திருமணம் செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இவனின் மூன்றாவது மனைவி வெளிநாட்டிற்கு சென்ற நிலையில்., இவரின் 5 வயது பெண் குழந்தை., பாஷாவின் தங்கை இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளார்.
குழந்தையின் தாயார் வெளிநாட்டில் இருக்கும் நிலையில்., குழந்தையை தன்னுடன் உறங்க வைத்து கொள்வதாக கூறிய காம கொடூரன்., சிறுமியை அழைத்து சென்று உறங்குவான் என்று அனைவரும் எண்ணியுள்ளனர். இந்த தருணத்தில்., சம்பவத்தன்று இரவு நேரத்தில் மது போதையில் வீட்டிற்கு வந்த பாஷா., தன் குழந்தை என்ற அறிவு கோடா இல்லாமல்., குழந்தைக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளான்.
இதனால் உடலளவில் பாதிக்கப்பட்ட சிறுமி., தனது அத்தையின் இல்லத்திற்கு சென்று., தந்தை செய்த செயலை கூறி., தனக்கு வலிப்பதாக கதறியழுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை திருப்பத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுமிக்கு சிகிச்சை அளித்த பின்னர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு ஷான்பாஷாவை கைது செய்தனர். மேலும்., 5 பெண்களை ஏமாற்றியும்., சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த கொடூரனிடம்., முன்னதாகவே தகுந்த பாடம் புகட்டியிருந்ததால்., இது போன்ற துயரம் நடைபெறாது என்பது அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore child sexual harassment by her father police investigation going on