இரண்டு குழந்தைக்கு அப்பனாக இருந்தும், சிறுமியை நாடகக்காதலால் ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்த காமுகன்.!!
in Vellore child sexual abuse drama lover arrest
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகேயுள்ள பகுதியில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுள்ள நிலையில், மேற்படி படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இப்பகுதியை சார்ந்த ராமச்சந்திரன் என்ற காமுகன் தனக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளதை மறைத்து, சிறுமியை காதலிப்பதாக கூறி நாடகக்காதலால் ஏமாற்றி காதலித்துள்ளான்.
உண்மையை அறியாத சிறுமி கயவனின் பேச்சில் மயங்கவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு திருமண ஆசைகாட்டிய காமுகன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.
இதனால் சிறுமி கர்ப்பமாகவே, இது தொடர்பான விஷயத்தை சிறுமி ராமச்சந்திரனிடம் கூறி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத காமுகன் சரிவர பதில் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர் ராமச்சந்திரன் குறித்து அப்பகுதியில் விசாரித்த நேரத்தில், இவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தனது மகளின் வாழ்கை சீரழிந்து இருப்பதை அறிந்து பெற்றோருக்கு ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, சிறுமியின் வீட்டாருக்கு காமுகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் காமுகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Vellore child sexual abuse drama lover arrest