7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும், சிறு குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சித்தி... மோக மயக்கத்தில் தந்தை..!! வேலூரில் பெரும் சோகம்.!!
in vellore child killed by second mother police investigation
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கத்தை அடுத்துள்ள ஆயர்பாடி பகுதியை சார்ந்தவர் சங்கர். இவர் சுமார் 7 வருடத்திற்கு முன்னதாக பணிக்காக கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றி வந்துள்ளார். இவரோடு இதே நிறுவனத்தில் தஞ்சாவூரை சார்ந்த பிரியா என்ற பெண்மணி பணியாற்றி வந்த நிலையில், இவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் சவுமியா (வயது 5) என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரியா சங்கரை பிரிந்து தஞ்சாவூருக்கே சென்ற நிலையில், குழந்தை சவுமியா சங்கரிடம் இருந்துள்ளது. மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான சங்கர், தனது குழந்தையை தாத்தா பாபு என்பவரின் இல்லத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்த தருணத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சார்ந்த சந்தியா (வயது 21) என்ற பெண்மணியை சங்கர் இரண்டாவதாக மணம்முடித்த நிலையில், இவர்கள் இருவரும் வாலாஜா சுங்கச்சாவடி அருகேயுள்ள முசிறி பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதன்பின்னர் தாத்தாவின் இல்லத்தில் இருந்த மகள் சவுமியாவை, கடந்த 10 ஆம் தேதியன்று முசிறிக்கு அழைத்து வந்துள்ளார்.
முசிறிக்கு வந்த சவுமியா, மறுநாளே அங்குள்ள வாலாஜா அரசு மருத்துவமனையில் உடல் முழுவதிலும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இங்கு வந்த தாத்தா மருத்துவர்களிடம் விசாரிக்கையில், சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது பேத்தியின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சந்தியா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், இவர்களின் உல்லாசத்திற்கு சிறுமி சவுமியா தடையாக இருந்துள்ளார். மேலும், வீட்டிற்கு உள்ளேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளாகி சவுமியாவை கட்டையால் அடித்துவிட்டு, மாடிப்படியில் இருந்து இருவரும் கீழே தள்ளிவிட்டோம். படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த சவுமியாவை படிக்கட்டு கூர்மை பகுதி நெஞ்சில் குத்தி கிழித்தது. தலையில் பலமான காயம் ஏற்பட்டது. உயிர் உள்ளதா? என்ற சந்தேகத்தில் வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டு வந்து, குழந்தை மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக தெரிவித்தோம்.
சவுமியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டது என்று தெரிவித்த நிலையில், எங்களின் மீது முதலிலேயே மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் எனது தந்தை வந்ததால், நாங்கள் இருவரும் தப்பிக்க முடிவு செய்து சம்பவ இடத்தில் இருந்து வெளியேறிய நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து காவல் துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore child killed by second mother police investigation