நடு ரோட்டில் தீப்பற்றி எறிந்த தனியார் பேருந்து..! பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அதிஷ்டவசமாக தப்பிய சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்து தனது பயணத்தை துவக்கியது. இந்த பேருந்தில் சுமார் 45 பயணிகள் இருந்த நிலையில்., பேருந்தை பாஸ்கர் (வயது 40) என்பவர் இயக்கி வந்தார். 

இந்த நிலையில்., பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த சமயத்தில்., பேருந்தின் எஞ்சினில் இருந்து திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர்., பேருந்தை உடனடியாக நிறுத்தவே., அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பேருந்தை விட்டு வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து பேருந்து எஞ்சினில் தீ மளமளவென பரவ துவங்கியது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் ஊழியர்கள்., பேருந்து தீப்பற்றி எரிய துவங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு சிலிண்டரின் உதவியோடு தீயை சிறிது கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

fire extinguisher, தீயணைப்பு கருவி,

பின்னர் இது தொடர்பாக தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்., தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., வாகனங்கள் அனைத்தும் மோட்டார் வாகன விதிகளின் படி இயக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்து., பேருந்துகளில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வைக்க அறிவுறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore bus got fire accident lucky passengers escaped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->