வடிவேல் பட பாணியில்., ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி..! பல்பு வாங்கிய கொள்ளையர்கள்..!!
In vellore atm thief try to theft police investigation going on
தீபஒளித் திருநாள் நாளை தமிழகத்தின் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று மற்றும் உறவினர்களின் இல்லங்களுக்கு சென்று தீபஒளி திருநாளை சிறப்பிப்பது வழக்கம்.
இந்த சமயத்தில்., வீட்டில் ஆட்கள் இல்லாததை உபயோகம் செய்து கொள்ளும் கொள்ளை கூட்டமானது வீடுகளில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவர்கள் தற்போதுள்ள நிலைமைக்கு தகுந்தாற் போல ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளையில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அடுக்கியுள்ள அம்பலூர் பகுதியில் இந்தியன் வங்கியை சார்ந்த ஏ.டி.எம் மற்றும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திலும் கொள்ளையடிக்க நள்ளிரவில் முயற்சித்துள்ளனர்.
இவர்களின் திட்டப்படி ஏ.டி.எம். மையத்தில் மிளகாய்ப்பொடியை தூவி கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில்., அங்கிருக்கும் கண்காணிப்பு காமிராவில் வர்ணத்தையும் பூசி மறைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முயற்சியானது தோல்வியை தழுவியதை அடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
காலையில் பணம் எடுக்க வந்த நபர் ஏ.டி.எம் மையத்தில் உடைந்து கிடந்த சிறுசிறு அடையாளம் மற்றும் மிளகாய்ப்பொடி தூவளை கவனித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In vellore atm thief try to theft police investigation going on