தாலி கட்டும் சமயத்தில், காவல் நிலையத்திற்குள் மணமாலையோடு தலைதெறித்து ஓடிய மணமகன்.! வேலூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகேயுள்ள திப்ப சமுத்திரம் கிராம பகுதியை சார்ந்தவர் மனோகரன். இவரது மகனின் பெயர் ரவி. இவருக்கும் - பலவான்சாத்துகுப்பம் பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவருக்கு திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. 

பெரியோர்களின் முடிவின் படி இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில்., திருமண தேதியை குறித்து., பத்திரிகைகள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு இருவீட்டாரும் வழங்கி வந்தனர். 

இந்த நிலையில்., இவர்களின் திருமண நிகழ்வு வேலூரில் உள்ள சேண்பாக்கம் விநாயகர் ஆலயத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்றிரவு மணமகன் மற்றும் மணமகள் அழைப்புகள் மற்றும் சடங்குகளும் நடைபெற்று முடிந்தது. 

marriage, weeding, indian marriage, south indian marriage, திருமணம், கல்யாணம்,

திருமண நாளான இன்று காலை இரு வீட்டாரும் சேண்பாக்கம் விநாயகர் ஆலயத்திற்கு வந்த நிலையில்., தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த சமயத்தில்., திடீரென திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவே., மோதல் நடக்கும் சூழ்நிலையானது ஏற்பட்டது. 

இந்த தருணத்தில்., மாப்பிள்ளை ரவியும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்., பெண்ணிற்கு தாலி கட்டாமல் ரவி நேரடியாக சென்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. 

மேலும் ரவியின் தரப்பில்., இன்று எனக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழ்நிலையில்., இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு., மோதலும் ஏற்பட்டது. இதனால் பெண்ணிற்கு தாலி கட்டாமல் காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் காவல் நிலையத்திற்குள் விரைந்ததை அடுத்து., இரு தரப்பினரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore after finishing marriage boy escaped form temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->