புதரில் இருந்து ஒரே சத்தம்.. தலையில் அடித்து செல்லும் பொதுமக்கள்.!
in vandalur park couple enjoy in gross publicly
தமிழகத்தின் சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவனது அமைந்துள்ளது. வண்டலூர் பூங்காவனது 602 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் நிலையில்., தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும்.
இந்த பூங்காவில் சுமார் 1,675 உயிரினங்களாக பாலூட்டிகள்., பறவைகள்., ஊர்வன மற்றும் இருவாழ் உயிரினங்கள்., மீன்கள் போன்றவை இருக்கிறது. இந்த பூங்காவிற்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்காவானது காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும் நிலையில்., வாரத்தின் ஒரு நாள் விடுமுறையாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும்., கோடைகாலத்தில் விடுமுறை தினங்களையொட்டி அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் நிலையில்., இந்த பூங்காவிற்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள்., திருவள்ளுர்., காஞ்சிபுரம்., செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்., இங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளின் அட்டூழியங்களுக்கு அளவில்லாமல் போயுள்ளது. இந்த பூங்காவில் இருக்கும் மறைவான இடங்கள்., மறைவான செடி மற்றும் புதர் போன்ற பகுதியில் அமர்ந்து முகம் சுளிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதல் ஜோடிகளை விட கள்ளக்காதல் ஜோடிகளின் அட்டூழியம் தாங்க இயலவில்லை என்று பூங்காவிற்கு வரும் நபர்கள் கருத்து தெரிவித்து., இது போன்ற செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in vandalur park couple enjoy in gross publicly