கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து கர்ப்பமான மனைவியை இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க விட்ட கணவன்..! உசிலம்பட்டியில் பரபரப்பு..!!
in usilampatti husband killed her wife due to illegal affair
தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகேயுள்ள வடிவேல்கரை பகுதியை சார்ந்தவர் போஸ். இவரது மகனின் பெயர் வடிவேல் (வயது 30). இவரது மனைவியின் பெயர் அம்சத் (வயது 22), இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த சமயத்தில்., அங்குள்ள செக்காலூரணி - தேங்கல்பட்டி பகுதியை சார்ந்தவர் மதன் (வயது 25)., இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் - அம்சத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
இந்த கள்ளக்காதல் உறவானது வடிவேலிற்கு தெரியவரவே., அம்சத்தை கண்டித்து கள்ளக்காதல் உறவை கைவிட கூறி கூறியுள்ளார். இதன் காரணமாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனின் கண்டிப்பை மீறியும் அம்சத் கள்ளக்காதல் தொடர்பை கைவிடாமல் உல்லாசம் அன்பவித்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கணவன் மற்றும் குழந்தைகளை பிரிய முடிவு செய்து., கணவன் - குழந்தைகளை தவிக்க விட்டு., கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் அங்குள்ள பசும்பொன் தெரு பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த கணவன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில்., மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதன்படி நேற்று இரவு சுமார் 11 மணியளவில் உறவினருடன் அம்சத்தின் இல்லத்திற்கு சென்ற வடிவேல்., வீட்டில் இருந்த அம்சத் - வடிவேலை சரமாரியாக வெட்டியதில் அம்சத் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நிலையில் இருந்த மதன் அறவே., இதனை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் விரைந்ததை அடுத்து வடிவேல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., பலியான அம்சத் நான்கு மாத கர்ப்பிணியாக தற்போது இருந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in usilampatti husband killed her wife due to illegal affair