கணவனை ஓடவிட்டு இரும்பு ராடல் அடித்து கொலை செய்த மனைவி.! பேரதிர்ச்சி சம்பவத்தின் பகீர் தகவல்.!!
in trichy wife killed her husband due to family fight
திருச்சி மாவட்டத்தில் உள்ள வையப்பட்டி அருகேயுள்ள கல்பாத்திசத்திரம் பகுதியை சார்ந்தவர் முருகேசன் (வயது 48). இவரது மனைவியின் பெயர் பஞ்சவர்ணம் (வயது 45). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., மூன்று மகன்கள் மற்றும் ஒன்பது மாதமேயான பெண் குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.
இவர்களின் இல்லத்தில் அடிக்கடி குடும்பத்தகராறு நடப்பது வழக்கம். இந்த சமயத்தில்., கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்பது மாதமாகும் மகளை முருகேசன் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை கண்ட மனைவி மற்றும் முருகேசனின் பிற மகன்கள் தடுத்து நிறுத்தி கண்டித்தும்., காதுகளில் கேட்காது தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனை கண்டு தாயின் மனம் பதறவே., செய்வதறியாது திகைத்த பஞ்சவர்ணத்திற்கு வீட்டின் சமயலறையில் இருக்கும் இரும்பு பைப் ஒன்று கிடைத்துள்ளது. குழந்தை அழுகையால் துடித்த காட்சியை கண்டு அதிர்ந்து போன தாயார்., கணவனின் பின்னந்தலையில் பலமாக அடித்துள்ளார்.
தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் மயங்கி விழுந்த நிலையில்., தலையில் இருந்து இரத்தம் பீரிட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக கணவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையை அனுமதித்த நிலையில்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி ஒரு கட்டத்திற்குமேல் முருகேசன் உயிரிழக்கவே., சம்பவ இடத்தில் இருந்து பஞ்சவர்ணம் தப்பியோடியுள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy wife killed her husband due to family fight