திருமணம் முடிந்த 8 மாதத்திலேயே மனைவியின் மீது சந்தேகம்.. எரித்து கொலை செய்த கொடூர கணவன்..!!
in trichy viralimalai by pass road wife killed by husband
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகேயுள்ள திங்கள்கிழமையன்று 20 வயதுடைய இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து., இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்., இந்த துயரத்தின் மறுநாள் போது விருதுநகரில் உள்ள பாண்டி நகர் காவல் நிலையம் சென்ற நபரொருவர்., தனது திருமணம் முடிந்த மகள் பானுரேகா கல்லூரியில் பயின்று வருவதாகவும்., இவரை காணவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பானுவின் கணவரான ராஜ்குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்., கல்லூரியில் பயின்று வந்த பானுரேகாவை கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி., அங்குள்ள விராலிமலை அருகேயிருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பெற்றோர்கள் ஊற்றி எரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விராலிமலை காவல் துறையினர் விருதுநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., கொலை நடைபெற்ற இடத்திற்கு ராஜ்குமாரை அழைத்து சென்றதை அடுத்து பானுரேகா கொலை செய்யப்பட்ட இடத்தை காட்டினான். இதனைத்தொடர்ந்து ராஜ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த ராஜ்குமார் என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரின் பெண்ணான கல்லூரியில் பயின்று வரும் 20 வயதுடைய மாணவி பானுரேகா - ராஜ்குமாருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்துள்ளது.
இவரது படிப்பு நிறைவடைந்ததும் பல்லடத்திற்கு அழைத்து செல்லலாம் என்று எண்ணியிருந்த நிலையில்., தனது மனைவியின் மீது கொடூரன் சந்தேகம் அடைந்துள்ளான். இந்த நிலையில்., பல்லடத்தில் இருந்து விருதுநகருக்கு வந்த ராஜ்குமார்., தனது மனைவியை கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி இரு சக்கர வாகனத்திலேயே ஸ்ரீரங்கம்., சமயபுரம் மற்றும் விராலிமலை பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் பானுரேகாவை கழுத்தறுத்து கொலை செய்து பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளான். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் கரூர் சென்று., அங்கிருந்து பேருந்து மூலமாக விருதுநகருக்கு சென்று நல்லவன் போல இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில்., பானுரேகாவின் சடலம் அடையாளம் தெரியாதவர் என்று கூறி காவல் துறையினரே அடக்கம் செய்த நிலையில்., தனது மகளின் சடலத்தை கூட காண இயலவில்லை என்று மாணவியின் தந்தை அழகர் வேதனை தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy viralimalai by pass road wife killed by husband