மனவளர்ச்சி குன்றிய சிறுமியை ஏழு மாதமாக கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்.! திருச்சியில் பேரதிர்ச்சி..!!
in trichy mentally affected girl rapped by dmk party member
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கான தீர்ப்பு இன்று வரை கிடைக்கப்பெறவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவல்குளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஆவார். இவரின் பெற்றோர் இருவரும் படிக்கவில்லை என்பதால்., கூலித் தொழில் செய்தே வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளனர்.
தினமும் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்ற நிலையில்., சிறுமி அவரது தாத்தாவின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்., தாத்தாவின் கண்காணிப்பில் இருந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பமாக இருப்பது தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த தாயார் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., சிறுமியை அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த மருத்துவர்கள்., சிறுமியை சோதனை செய்து., திருச்சி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்ல கூறி அறிவுரை செய்துள்ளனர்.
பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி., சிறுமியை அங்குள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு., சிறுமியின் தாயார் அழைத்து சென்ற நிலையில்., சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த மருத்துவர்கள் மற்றும் குழந்தையின் தாயார் திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கும்., குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது., திருச்சியில் உள்ள கீழசிந்தாமணி பகுதியை சார்ந்த பால்காரன் முத்து (வயது 57)., பெரமங்கலம் தேநீர் கடை நடத்தி வருபவன் செல்வராஜ் (வயது 51), பெரமங்கலம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருபவன் ராமராஜ் (வயது 45) மற்றும் பெரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் (வயது 49) ஆகிய காம கொடூரன்கள் சிறுமியை சீரழித்தது தெரியவந்தது.
இவன்கள் நால்வரும் கடந்த ஏழு மாதமாக சிறுமியை சீரழித்ததன் விளைவாக சிறுமி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. இந்த நான்கு காம கொடூரன்களில் பெரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த காம கொடூரன் செல்வராஜ் திமுக கட்சியின் மாவட்ட விவசாய அணி மற்றும் திமுக ஊராட்சி பகுதி பொறுப்பிலும் இருக்கிறான் என்பதும் தெரியவந்துள்ளது.
இவன்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., அனைவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும்., சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில்., சிறுமியின் தாத்தா மற்றும் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy mentally affected girl rapped by dmk party member