அதிக மதுபோதையில் விமான பயணம்.! இறுதியில் சுற்றுலா வந்த மலேசிய பயணிக்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


மலேசிய நாட்டில் இருக்கும் சிலாங்குர் பகுதியை சார்ந்தவர் மூர்த்தி (வயது 42). இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்க முடிவு செய்து., தமிழ்நாட்டின் திருச்சிக்கு வந்திருந்தார். 

திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்., அங்குள்ள வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்து வந்தார். இந்த நிலையில்., விடுதியில் இருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இவர் வெளிநாட்டுப்பயணி என்பதை அறிந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

malesiya drinking man, trichy case

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., திருச்சிக்கு சுற்றுலா வந்த மூர்த்தி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து., விமான நிலயத்தில் இருந்து மீண்டும் கோலாலம்பூர் செல்ல முடிவு செய்துள்ளார். 

இந்த சமயத்தில் அதிக போதையில் இருந்த அவரை விமானத்தில் அழைத்து செல்ல விமான அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில்., மீண்டும் விடுதிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் விடுதி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலானது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள நிலையில்., காவல் துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy Malaysian tourist died due to heavy drinking


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->