நான் உங்க மகளோட தோழி அப்பா.. என்னை விட்டுடுங்கப்பா.!! கதறிய சிறுமிக்கு., இறுதியில் நேர்ந்த பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் மணல்மேடு பகுதியை சார்ந்தவர் நடராஜன். இவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறான். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 15 வயதுடைய மகள் இருக்கும் நிலையில்., இவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்த சிறுமியுடன்., அவரது தோழியான அதே பகுதியை சார்ந்த கவிதா (வயது 15., பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற சிறுமியும் பயின்று வந்துள்ளார். இவர்கள் இருவரின் இல்லமும் பக்கத்து பக்கத்தில் இருப்பதால்., கவிதா தனது தோழியின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

இந்த சமயத்தில்., தோழியின் தந்தையான நடராஜனுடன் பேசி கொண்டு வந்துள்ளார். இந்த தருணத்தில்., மகளின் தோழி மீது நடராஜனின் காம பார்வையை வைத்துள்ளான். இதனையடுத்து வீட்டில் மகள் மற்றும் மனைவி இல்லாத சமயத்தில்., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

மேலும்., தனது மகளின் வயதில் உள்ள சிறுமியை மகள் போல எண்ணாது பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளான். இதனை வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி., மேலும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

இந்த சமயத்தில் சிறுமி கர்ப்பமாகவே., சிறுமியின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை அறிந்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். சிறுமியை சோதனை செய்ததில்., சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானதை அடுத்து., சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., நடராஜனை கைது செய்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2017 ஆம் வருடம் நவம்பரில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதிகளின் முன்னிலையில்., மீண்டும் இவ்வழக்கு வந்ததை அடுத்து., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வனிதா., காம கொடூர நடராஜனிற்கு 12 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும்., பாதிக்கப்பட்ட சிறுமி தவறி கீழே விழுந்ததில் அவரது கரு கலைந்த சூழ்நிலையில்., தனது பள்ளிப்படிப்பையும் நிறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிட்டக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl rapped case court order jail 12 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->