காவல் துறை அதிகாரி என்று கூறி மாணவியை கடத்தி சீரழித்த காம கொடூர திருடன்.! பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சி - தஞ்சாவூர் சாலையில் இருக்கும் தேசிய தொழில் நுட்ப வழக்கமான என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சார்ந்த மாணவ - மாணவியர்கள் தங்கியிருந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கான தனித்தனி விடுதியானது கல்லூரி வளாகத்திற்குள்ளேயே செயல்பட்டு வருகிறது. 

இந்த கல்லூரியில் மஹாராஷ்டிர மாநிலத்தை சார்ந்த மாணவியொருவர் பயின்று வந்த நிலையில்., மாணவியின் தந்தை கல்பாக்கத்தில் உள்ள அனல்மின் நிலையத்தில் பணிசெய்து வருகிறார். இவர் அடிக்கடி தந்தையை நேரில் சென்று சந்தித்து வருவது வழக்கம். இந்நிலையில்., இந்த நேரத்தில்., மாணவிக்கும் - அந்த பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

torture, sexual abuse,

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., கடந்த ஒன்றாம் தேதியன்று இரவு மாணவி அனுமதியின்றி விடுதியை விட்டு சென்ற நிலையில்., மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து இருவரும் அங்குள்ள கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை 3 மணியளவில் இருந்துள்ளனர். இந்த நேரத்தில்., அங்கு வந்த வாலிபன் ஒருவன் தன்னை காவல் துறை அதிகாரி என்று அறிமுகம் செய்து., மாணவியை கல்லூரியில் கொண்டு விடுவதாக அழைத்து சென்றுள்ளான். 

மாணவியை விடுதிக்கு அழைத்து செல்லாமல்., அங்கிருக்கும் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். நம்மை அழைத்து செல்பவன் காவலர் அல்ல என்பதை உணர்ந்த பெண்மணி., கூச்சலிடவே அங்கிருக்கும் காட்டுப்பகுதிக்குள் வைத்து மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து மாணவி தனக்கு நடந்த கொடூரத்தை நண்பர்களிடம் கூறியதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த நண்பர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

sexual harassment, sexual abuse, பாலியல் வன்கொடுமை,

இந்த விஷயம் குறித்தும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., வந்த காவல் துறை அதிகாரி ஒரு திருடன் என்றும்., அந்த காம கொடூரனின் பெயர் வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சார்ந்த காம கொடூர மணிகண்டன் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., இதனை போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., கைதான காம கொடூரன் கழிவறைக்கு சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததாகவும்., இவனை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து காயம்பட்ட இடத்தில் மருத்துவர்கள் கட்டுபோட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக புகைப்படம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl rapped by culprit slipped from toilet police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->