நாடக காதலை ஏற்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த திருமணம் முடிந்த காம நாடக காதல் கொடூரன்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியை சார்ந்த மாணவியின் பெயர் மலர்விழி மீரா. இவர் தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில்., அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். 

அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரான முரளி என்பவன் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். இந்த நாடக காதலை அரங்கேற்றிய கொடூரனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

தொடர்ந்து மாணவிக்கு நாடக காதல் வலையை விரித்து வந்த நிலையில்., இது குறித்து வீட்டில் கூறினால் படிப்பு தடைபட்டு விடுமோ? என்ற பயத்தால் மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில்., நேற்று வழக்கம்போல கல்லூரி சென்று வந்த மாணவியை இடைமறித்த கொடூரன் முரளி., மாணவியை கத்தியால் குத்தவே., வலியால் அலறித்துடித்து உயிருக்கு போராடினர். 

இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., மாணவி வரும் வழியிலேயே பரிதாபமாகி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியை கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறியளவே., ஆத்திரமடைந்து முரளியை அடித்து நொறுக்கினர். இதனால் படுகாயமடைந்த கொடூரன் முரளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy girl killed by culprit due to one side love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->