சிறுமியை காரில் கடத்தி கட்டாயத்திருமணம்.. தந்தைக்கே சவால்.. காரில் சென்று மடக்கிப்பிடித்து நொறுக்கியெடுத்த சொந்தங்கள்.!!
In Trichy girl kidnapped and marriage attempt by one side lover
தமிழகத்தின் திருச்சி திருவானைக்காவல் வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சார்ந்தவர் நடேசன் (வயது 55). இவரது மகன் பெயர் சாந்தா (வயது 18). சிறுமி சாந்தா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவருக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சாந்தாவுடைய அத்தைமகள் கோமதி என்பவர் சாந்தாவைகடைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து உறவினர் என்று நம்பி அவருடன் சென்று கொண்டு இருந்த நிலையில், திருச்சி மாம்பழச்சாலை காவேரி பாலத்திற்கு அருகே சென்றுள்ளனர். அந்த பாலத்திற்கு அருகே சாந்தாவை ஒருதலையாக காதலித்து வந்த அவரது அத்தை மகன் பூவரசன் என்பவன் இருந்துள்ளான்.
இவனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கவே, முன்னதாகவே தயாராக இருந்த பூவரசன் சிறுமியை காரில் கடத்தியுள்ளான். அப்பகுதி வழியாக சென்ற நபரொருவர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், சாந்தாவை கடத்தி அவரது தந்தைக்கு விஷயத்தை தெரிவித்து கட்டாய திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளான். இதனைக்கேட்டு பதறிப்போன நடேசன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பழனி முருகன் கோவிலில் திருமண ஏற்பாடு நடப்பது தெரியவந்ததை அடுத்து, காரில் விரைந்து சென்ற உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில் வைத்து கடத்தல் கும்பலை மடக்கி சாந்தாவை மீட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In Trichy girl kidnapped and marriage attempt by one side lover