நாடக காதல் விவகாரத்தில்., நாடக காதலனை ஓடவிட்டு வெளுத்தெடுத்த அண்ணன்களை தீவிரமாக தேடும் காவல் துறை..!!
in trichy girl brother attack case police investigation going on
திருச்சி மாவட்டத்தில் உள்ள திம்மராய சமுத்திரத்தை சார்ந்தவர் மணிகண்டன். இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்த நிலையில்., மனைவி அவருடைய கள்ளத்தொடர்பின் காரணமாக அவருடன் சென்றுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த மணிகண்டன் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில்., மணிகண்டனிற்கு திடீரென விபரீத ஆசை ஒன்று தோன்றியுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியை காதல் வலையில் விழவைத்துவிட வேண்டும் என்ற விபரீத எண்ணம் தோன்றியுள்ளது.
இதனையடுத்து சிறுமிக்கு நாடக காதல் வலையை வீசி வந்துள்ளான். இது குறித்து சிறுமி தனது சகோதரர்களிடம் தெரிவித்ததை அடுத்து., சிறுமியின் சகோதரர்கள் மணிகண்டனை எச்சரித்துள்ளனர். இதனை மணிகண்டன் கண்டுகொள்ளாது மாணவியை தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு வந்துள்ளான். சிறுமி மணிகண்டனிடம் பேசி புரியவைத்து விடலாம் என்று எண்ணி இருந்துள்ளார். இந்த நிலையில்., நேற்று இவர்கள் இருவரும் அங்குள்ள கோவிலில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்ததை., சகோதரர்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த சகோதரர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆயுதத்துடன் விரட்டியுள்ளனர். இவர்கள் விரட்டியதில் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டு., அங்கிருந்த அடகுக்கடையில் நுழைந்த மணிகண்டனை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த விஷயம் குறித்த காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகவே., தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மணிகண்டனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து., இந்த விசயத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் உள்ள திருவானைக்கோவில் பாரதி நகரில் உள்ள பாதையில் ஐந்து பேர் கொண்ட கும்பலானது மணிகண்டனை ஓடவிட்டு துரத்தி இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்து நகைக்கடைக்கு உள்ளே சென்ற நிலையில்., வெளியே இழுத்து வந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மணிகண்டனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து., இது குறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். மேலும்., திருமணமான வாலிபன் மனைவியை பிரித்து வாழ்ந்து வந்த நிலையில்., பத்தாம் வகுப்பு பயின்ற சிறுமிக்கு நாடக காதல் வலை விரித்து வந்த நிலையில்., இதனை கண்ட சிறுமியின் சகோதரர் மணிகண்டனை எச்சரித்துள்ளார்.
இந்த சமயத்தில்., நாடக காதல் மணிகண்டன் மீண்டும் சிறுமியை சந்தித்து நாடக காதல் வலைவிரித்த சமயத்தில்., சிறுமியின் சகோதரர் சிவா இதனை கண்டுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட தகராறில் பாசக்கார அண்ணன்கள் நாடக காதல் வலைவிரித்த காம கொடூரனை தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy girl brother attack case police investigation going on